Monday, December 1, 2025

5 மாநகராட்சிகளில் அமலுக்கு வருகிறது முழு ஊரடங்கு… கடும் கட்டுப்பாடுகளும் அறிவிப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, சேலம், மதுரை, திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்துபடுகிறது.

அதன்படி சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும்; சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலும் முழுமையான ஊரடங்கு அமலாகிறது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 5 மாநகராட்சிகள் தவிர மற்ற மாநகராட்சிகளில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும்.

முழு ஊரடங்கு காலத்தில் தலைமைச் செயலகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை, காவல்துறை ஆகியவை தேவையான பணியாளர்களுடன் செயல்படும் என்றும் கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி

தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் உணவுக்கு அனுமதி. முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 5 மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் வழக்கம்போல் செயல்படும்; வங்கிகளில் 33% பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என பல்வேறு நெறிமுறைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img