சமூக வலைதலங்களில் வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், தப்லீக் ஜமாத்திற்கு எதிராகவும் சங்கபரிவார இயக்கங்களால் தொடர்ந்து வன்முறை மற்றும் பொய்யான கருத்துக்கள் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகின்றது.
அதனை குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருவாரூர் மாவட்டம் சார்பாக சமூக வலைதலங்களில் வெறுப்பு மற்றும் அவதூறு பரப்பிய திருத்துறைப்பூண்டியை சார்ந்த இந்து முன்னனி மாவட்ட நிர்வாகி சிவாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் துறை அதிகாரிகளிடம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக (23.04.2020 ) அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. அதன் பெயரில் காவல்துறை அதிகாரிகள் (25.04.2020 ) இன்று அவரை கைது செய்தனர்.
மேலும் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றியை தெரிவித்து கொள்வதோடு இதுபோன்று வெறுப்பு மற்றும் அவதூறு பரப்புவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருவாரூர் மாவட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறது.