அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் அமெரிக்கவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை விட 10 சதவீத புள்ளிகள் முன்னிலை வகிக்கிறார் என்று புதிய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் நேற்றைய தினம் இந்த கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
என்.பி.சி நியூஸ் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகியவை நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில், ட்ரம்ப்பிற்கு 42 சதவீத ஆதரவும், பிடனுக்கு 52 சதவீதமான ஆதரவும் கிடைத்துள்ளது.
அரிசோனா, புளோரிடா, ஜோர்ஜியா, அயோவா, மைனே, மிச்சிகன், மினசோட்டா, வட கரோலினா, நியூ ஹாம்ப்ஷயர், பென்சில்வேனியா உட்பட்ட 12 ஒருங்கிணைந்த மாநிலங்களில் பிடன் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது.
அக்டோபர் 29 முதல் 31 வரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 57 சதவீத வாக்காளர்கள் ட்ரம்ப் கொரோனா தொற்றுநோயைக் கையாண்ட விதத்தை தவறு என்று கூறியுள்ளனர்.
உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க தேர்தலை அதிரையர்கள் சற்று உன்னிப்பாகவே(?) கவனித்து வருகிறார்கள்.