Friday, March 20, 2026

அதிரையில் உயிர்ப்பலிக்கு காத்திருக்கும் பாலடைந்த கட்டிடம் !

spot_imgspot_imgspot_imgspot_img

உடனடியாக இடித்துதர கிராமமக்கள் கோரிக்கை!!

அதிராம்பட்டினம் முத்தமாள் தெருவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கயிறு திரிக்கும் பணிக்காக நாபர்டு வங்கி உதவியுடன் உயர்ந்த கட்டிடம் எழுப்பபட்டன.

அன்றைய காலகட்டத்தில் அதில் கயிறு திரிக்கும் பணிகளில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வந்தனர், காலப்போக்கில் இத்தொழில் நலிவடைய தொடங்கியது இதனால் இக்கட்டிடம் உபயோகமின்றி காணப்பட்டது இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது.

நாளுக்கு நாள் சிதிலமடையும் இக்கட்டிடம் எப்பொழுது விழுமோ என்ற ஐயப்பாட்டுடன் அப்பகுதிவாழ் பொதுமக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த கஜா புயலுக்கே பலகீனமான இக்கட்டிடம் தற்போது எந்நேரமும் விழும் நிலையில் உள்ளன. இதருணத்தில் நிவர் எனும் புயல் கரையை கடக்கும் நேரத்தில் டெல்டா பகுதிகளில் அதீத மழையும் அதனுடன் கூடிய காற்றும் பலமாக வீசும் என்பதால் இப்பகுதி மக்கள் அப்பகுதிகளில் நடமாட அச்சப்படுகிறார்கள்.

அருகில் கோவில் வளாகம் உள்ளதால் சிறுவர்கள் முதல் எல்லோரும் சாமியை வழிப்பட அப்பகுதியை அச்சத்துடனே கடக்கும் நிலை உள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இக்கடிடத்தை முழுவதுமாக இடித்து உயிர்பலி ஏற்படாதவாறு மக்களை காக்க வேண்டும் என அக்கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img