Friday, September 12, 2025

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

spot_imgspot_imgspot_imgspot_img

மறு அறிவிப்பு வரும் வரை, மூன்று வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க குழு அமைத்தும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இந்தக் குழுவில் அசோக் குலாட்டி, ஹர்சிம்ராட் மன், அனில் கன்வாட், பிரமோத் ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேவேளையில், நாடாளுமன்றத்தில் 2 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இடைக்கால நிவாரணம்தானே தவிர முடிவு அல்ல என்று விவசாயிகள் தரப்பு கூறுகிறது.

முன்னதாக, டெல்லியில் தொடரும் போராட்டம் பற்றிய வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள் ‘சட்டங்களின் செல்லுபடியாகும் தன்மை பற்றியும், போராட்டங்களால் பாதிக்கப்பட்ட குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பது குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.

எங்களிடம் உள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப பிரச்னையை தீர்க்க முயற்சிக்கிறோம், சட்டத்தை இடைநிறுத்த எங்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் சட்டத்தை இடைநிறுத்துவது வெற்று நோக்கத்திற்காக இருக்கக்கூடாது. நாங்கள் ஒரு குழுவை அமைப்போம், அது எங்களுக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும், அதன்பின்னரே நடவடிக்கை எடுப்போம். பிரச்னைக்கு தீர்வு காண குழு அமைப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது, சுமூக தீர்வு காண விரும்புவோர் குழுவிடம் தங்களின் கோரிக்கைகளை முன்வைக்கட்டும். குழு அமைப்பதை விவசாய சங்கங்கள் ஏற்காது என்பதை நாங்கள் ஏற்கமாட்டோம்’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் விவசாயிகள் சுமார் 50 நாள்களாக போராடி வருகின்றனர். அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சு வார்ததையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img