Wednesday, March 18, 2026

திமுக கூட்டணியில் மதிமுக-வுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளில் மிகவும் பிசியாக உள்ளது. ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் முதல்வர், துணை முதல்வர் உள்பட 6 வேட்பாளர்கள் போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அதிமுக வெளியிட்டது. அதிமுக-தேமுதிக பேச்சுவார்த்தைதான் நீண்ட இழுபறியில் உள்ளது. தற்போது இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

திமுகவை பொறுத்தவரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்திய கம்யுனிஸ்டுக்கு 6 தொகுதிகள், முஸ்லீம் லீக்கிற்கு 3 தொகுதிகள், மமவுக்கு 2 தொகுதிகளும் திமுக ஒதுக்கியது. ஆனால் மதிமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்து வந்தது. கடந்த தேர்தல்களை விட மிகவும் குறைவான தொகுதி ஒதுக்க திமுக முன் வந்தததால் இரு கட்சிகளும் அதிருப்தி நிலையிலே இருந்து வந்தன.

இந்த நிலையில் மதிமுகவுடன், திமுக விறுவிறுப்பாக பேச்சு நடத்தி வந்தது. மதிமுக 12 தொகுதிகள் கேட்டது. திமுக 6 தொகுதிகள் தருவதாக கூறியதால் இழுபறியுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்கு இடையே பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. இந்த 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதற்கான ஒப்பந்தத்தில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக கூட்டணியில் 6 தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த 6 தொகுதிகள் என்னென்ன? இந்த தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்று மதிமுக அறிவித்துள்ளது. திமுக காங்கிரஸுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு நடத்தி வருகிறது. இதுவும் சுமுகமாக முடியும் பட்சத்தில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

திமுகவுடனான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்துக்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டியளித்தபோது கூறியதாவது:- திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுகவுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டோம். சனாதன சக்திகளை முறியடிப்பது என உறுதியேற்று திமுகவுக்கு ஆதரவாக இருப்போம். ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் என கருணாநிதிக்கு உறுதி அளித்திருந்தேன். வாக்கு சேகரிப்பில் ஈடுபட குறைவான நாட்களே இருப்பதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்று வைகோ கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img