Saturday, September 13, 2025

ரூ. 70 லட்சம் சீட்டு மோசடி – பாஜக தேர்தல் பொறுப்பாளர் கந்துவட்டி சீனிவாசன் கைது !

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையில் நிதி நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் ரூ70 லட்சம் மோசடி செய்ததாக பாஜகவின் வடசென்னை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் சீனிவாசன், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை செம்பியம் பகுதியில் சுவர்ணலட்சுமி நிதி நிறுவனம் நடத்தி வந்தார் சீனிவாசன். மேலும் கந்துவட்டி தொழிலும் செய்து வந்தார்.

வட்டி தராதவர்கள், பணத்தை திருப்பி கொடுக்காதவர்களை அடியாட்கள் மூலம் மிரட்டி வந்தாராம் சீனிவாசன். இந்த நிலையில் சீட்டு பிடிப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்திருக்கிறார் சீனிவாசன்.

ஆனால் அப்படி வசூல் செய்த பணத்தை சீனிவாசன் திருப்பி தராமல் ரூ70 லட்சம் மோசடி செய்திருக்கிறார் என்பது புகார். இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் இன்று சீனிவாசனையும் அவரது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source : One India Tamil

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img