Saturday, September 13, 2025

ஹாஸ்பிடலில் படுக்கை வசதி பெற தனி ட்விட்டர் அக்கவுண்ட், ஹேஸ்டேக் – அசத்தும் தமிழகம்!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 17,000-ஐ கடந்து விட்டது.

தினசரி உயிரிழப்பும் 100-ஐ கடந்து செல்கிறது. தலைநகர் சென்னையை கொரோனா புரட்டியெடுத்து வருகிறது. சென்னையில் மட்டும் தினசரி பாதிப்பு 4,000-ஐ கடந்து விட்டது. அம்பத்தூர், அண்ணா நகர், கிண்டி, எழும்பூர் என அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்று பரவி கிடக்கிறது. சென்னையின் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி ஏறக்குறைய நிரம்பி விட்டன.

இதனால் எந்த மருத்துவமனையில் படுக்கை வசதி உள்ளது? இதை எப்படி அறிவது? என தெரியாமல் மக்கள் தவித்து வந்தனர். இது தொடர்பாக பலர் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் கொட்டி தீர்த்தனர். இந்த நிலையில் மக்களின் இந்த பிரச்சினையை தீர்க்க தமிழக சுகாதாரத்துறை பலே யோசனையை கையில் எடுத்துள்ளது. அதாவது கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி பெற ட்விட்டர் கணக்கு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது தமிழக சுகாதாரத்துறை.

மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தேவைப்படுபவர்கள் @1O4GoTN என்ற ட்விட்டர் கணக்கு மூலம் அதனை தெரியப்படுத்தலாம். இந்த கோரிக்கையை கையாள ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் படுக்கை மேலாண்மையை இணையம் வழியாக கட்டளை மையம் கண்காணித்து படுக்கை இருப்பை பொறுத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டளை மையம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதியுடன் கிடைப்பதையும் உறுதிசெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெளிவாக சொல்வது என்றால் இந்த ட்விட்டர் கணக்கு மூலமாக மக்கள் மொத்தம் எத்தனை ஆக்சிஜன் சிலிண்டர்கள் (Oxygen Cylinder), படுக்கை வசதி பெறலாம் என்ற தகவலை பெறமுடியும். தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கான காலியாக உள்ள படுக்கைகளை அறியவும் வெண்டிலேட்டர், ஆக்சிஜன் உதவி கோரவும் முடியும்.
ட்விட்டர் வசதியை பிரபலப்படுத்த #BedsForTN என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img