Monday, December 1, 2025

கொரோனாவால் இறந்த இந்து சகோதரரின் உடலை அடக்கம் செய்த முஸ்லிம்கள் – ரம்ஜான் தினத்திலும் தலைத்தோங்கும் மனிதநேயம்!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்த ஹிந்து சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை உயிரிழந்தார். கொரோனா தொற்றால் மரணமடைந்தவர் என்பதால் அவரை அடக்கம் செய்வதற்கு, அவரின் குடும்பத்தினர் தஞ்சை தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

உடனே அக்குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று நோன்பு பெருநாள் என்றும் பாராமல், தமிழக சுகாதாரத்துரையின் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அவரின் உடலை தவ்ஹீத் ஜமாஅத்தினர் அடக்கம் செய்தனர்.

இப்பணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், சம்பைப்பட்டினம் உள்ளிட்ட கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் செய்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த 4 உடல்களை அடக்கம் செய்துள்ளதாகவும், ஒன்று தஞ்சை மாநகர பகுதி மற்றும் மற்ற 3 உடல்கள் பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகளில் அடக்கம் செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான நோன்பு பெருநாள் அன்று கொரோனாவால் உயிரிழந்த இந்து சகோதரரின் உடலை இஸ்லாமியர்கள் அடக்கம் செய்துள்ளது, அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

அதிரை கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் முப்பெரும் விழா!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளிவாசலின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா, முப்பெரும் விழாவாக நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது. அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ...

அதிரையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கவுன்சிலர்கள் பகுருதீன், அன்சர்கான்!

2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் குடியுரிமை திருத்தம் சட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான...
spot_imgspot_imgspot_imgspot_img