Saturday, September 13, 2025

கொடைக்கானலில் சதமடித்த பெட்ரோல் விலை – மக்கள் கடும் அவதி!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் முதல்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் அதிகபட்சமாக பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 100.04 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் நிர்ணயம் செய்கின்றன. தற்போது இதன் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. 5 மாநில தேர்தல்களுக்கு பிறகு மே மாதம் 2ஆவது வாரத்தில் பெட்ரோல்- டீசல் விலை உச்சத்தை தொட்டது. பின்னர் குறைந்தது. இதையடுத்து தற்போது உச்சத்தை தொட்டு வருகிறது.

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிகபட்சமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.04 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டீசல் விலை ரூ 93.92 பைசாவிற்கும் ஸ்பீடு பெட்ரோலின் விலை ரூ 102.83 பைசாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் முதன்முறையாக பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்தது கொடைக்கானலில்தான். இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளார்கள். கொரோனா ஊரடங்கால் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என கவலை கொண்டுள்ளனர். மேலும் எரிபொருள் விலையை குறைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியாவில் ராஜஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் விலையும் டீசல் விலையும் ரூ 100 ஐ தாண்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் வேலையிழப்பு, ஊதிய குறைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் இதை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img