Saturday, September 13, 2025

நாங்கள்தான் அசல் தமுமுக – அடித்துக்கூறும் மா.செ! எஸ்பி-யிடமும் புகார்!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக சார்பாக மாநில துணைச் செயலாளர் அஹமது ஹாஜா தலைமையில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு இன்று அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பதாவது :

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் என்று பதிவு செய்யப்பட்ட (பதிவு எண் :1/2015) எங்களது அமைப்பை ஐவாஹிருல்லாஹ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சட்ட ரீதியான எந்த ஆதாரம் மற்றும் முகாந்திரமும் இல்லாமல் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் எங்களது உரிமை பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இயக்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார்கள் என குற்றச்சாட்டுகள் வருகிறது.

ஜவாஹிருல்லாஹ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எந்த காரணத்தை கொண்டும் எங்களின் தமுமுக என்ற பெயரை பயன்படுத்த கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனை பெற்றுக்கொண்ட
தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் ஐபிஎஸ், இது குறித்து விசாரனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img