நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஏதுவாக பல்வேறு கட்சியினர் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.
திமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் நகர் மன்ற தேர்தலில் போட்டியிட ஏதுவாக நகர திமுகவிடம் சில வார்டுகளை ஒதுக்க கேட்டு கொண்டன.
ஆனால் கருப்பு சிகப்பு அணியிடமிருந்து சிக்னல் ஏதும் கிடைக்காததால் தனித்து களம் காண தயாராகி வருகிறது கருப்பு வெள்ளை கூட்டத்தினர்.
அதன்படி வருகின்ற 27ஆம் தேதியன்று அதிராம்பட்டினம் நகர மமக அலுவலகத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளாவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என தெரிவித்து இருக்கின்றனர்.
இதுகுறித்து மமக செயலாளர் இதிரீஸ் கூறுகையில், அதிராம்பட்டினம் நகராட்சி தேர்தலில்
கூட்டணி கட்சியான திமுகவிடம் உரிய வார்டுகளை கேட்டுள்ளோம் என்றும், அதற்கு முன்னேற்பாடுகள் செய்து கொள்ள தலைமை வலியுறுத்தியதால் விருப்பமுள்ள மமகவினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.