Thursday, May 16, 2024

அதிரையில் ததஜ சார்பில் நடந்த இரத்ததான முகாம் – ஏராளமான இரத்த கொடையாளர்கள் தானம் !! (படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று அதிராம்பட்டினம் ஆயிஷா மகளிர் அரங்கில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

இதில் மாவட்ட மருத்துவ அணியின் அமைப்பாளர் அப்பாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், அப்போது பேசிய அவர், தஞ்சை இராஜா மிராசுதார் மருத்துவமனை மற்றும் அதிரை ததஜ கிளைகள் சார்பில் நடந்த இந்த மாபெரும் இரத்த தானத்தை பொறுத்தவரை சமீபத்திய அரசு அவசர உயிர்காக்கும் மருத்துவ துறையின் அறிக்கையில் பல மருத்துவமனைகளில் போதிய அகவு இரத்த இருப்பு இல்லை என்றும் இதனால் உயிரிழப்பு உள்ளிட்ட இடர்பாடுகள் அரங்கேறி வருவதாக அது காட்டுகிறது.

இதனை அடுத்து அதிராம்பட்டினம் ததஜ கிளை 1,2 ஆகியவை இணைந்து இந்த இரத்த தான முகாமினை நடத்தி வருகிறார்கள்.

இதே போன்று ஆவனத்தில் விரைவில் மாபெரும் இரத்த தான முகாம் நடத்த இருப்பதாக தெரிவித்த அவர் ததஜவை பொறுத்தவரை முகாம்களில் மட்டுமல்ல அவசர தேவைகளுக்கு கூட இரத்த கொடையளித்து வருகிறார்கள்.

இதற்காகவே பிரத்தியேக செயலி ஒன்றையும் மாநில தலைமை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது..அதன்மூலம் நாளொன்றுக்கு 50க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகிறது எனவும், கொடையாளர்கள் மட்டுமின்றி இரத்தம் தேவை உள்ளவர்களும் இச்செயலி மூலமாக இலகுவாக இரத்தம் பெற இயலும் என்றார்.

முன்னதாக மருத்துவர்கக் கொடையாளர்களை ததஜவின் நிர்வாகிகள் வரவேற்றனர்.

இரத்தம் கொடையளித்த அனைவருக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் பழரசம் வழங்கினர்

.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...