கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம் முழுக்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் பொதுமக்களுக்கு தாகத்தை தனிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் என கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லஹ் MLA நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில், தஞ்சை தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் நகர தமுமுக – மமக சார்பில் தக்வா பள்ளி அருகாமையில் இன்று செவ்வாய்க்கிழமை (07.05.2024) பொதுமக்களுக்கு தாகம் தனிக்க ஐஸ் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 800க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ஐஸ் மோர் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வினை நகர மமக செயலாளர் முகமது அஸ்லாம் துவங்கி வைத்தார். நகர தலைவர் செய்யது புகாரி, நகர துணைத் தலைவர் முகமது யூசுப், முத்துப்பேட்டை நகர பொருளாளர் முகமது நபில், மாவட்ட தொழிற்சங்கம்(MTS) செயலாளர் சேக் நசூரூதீன், நகர தமுமுக துணை செயலாளர் ஹாஜா மைதீன், நகர மமக துணை செயலாளர் ஜகுபர் சாதிக், அணி நிர்வாகிகள், மூத்த உறுப்பினர் அஷ்ரப் அலி மற்றும் தக்வா ஆட்டோ ஸ்டாண்ட் MTS உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு ஐஸ் மோர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக நகர தமுமுக செயலாளர் முனைவர். ஷேக் அப்துல் காதர் மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சகாபுதீன் ஏற்பாடு செய்தனர்.
தொடர்ந்து கோடை முழுவதும் ஆங்காங்கே நீர், மோர் மற்றும் பழச்சாறு வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். இந்த பணியினை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், தொழிலாளிகள் வெகுவாக பாரட்டினர்.