Monday, May 13, 2024

அதிரை நகராட்சியின் வழக்குகளை நடத்த மட்டும் ரூ.5லட்சமாம்! கரையும் மக்களின் வரிப்பணம்!!

Share post:

Date:

- Advertisement -

அலைக்கழிப்பு உள்ளிட்ட அதிரை நகராட்சியின் செயல்பாடுகளால் அதிருப்தி அடையும் பொதுமக்கள் உரிய தீர்வை பெற நீதிமன்றத்தை நாடுவது வழக்கம். அவ்வாறு அதிரை நகராட்சிக்கு எதிராக தொடரப்படும் நீதிமன்ற வழக்குகளில் இதுவரை அதிரை நகராட்சியின் சார்பில் வழக்கறிஞர் தீனதயாளன் ஆஜராகி வந்தார். இந்நிலையில் தற்போது அவரிடம் இருந்த அனைத்து வழக்குகளையும் வழக்கறிஞர் பி.எஸ்.ஜெயக்குமாரிடம் மாற்ற அதிரை நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த வழக்குகளுக்கான உத்தேச செலவினமாக ரூ.5லட்சம் என கணக்கிட்டிருக்கும் நகராட்சி நிர்வாகம், அதனை பொது நிதியிலிருந்து செலவு செய்ய தீர்மானித்திருக்கிறது. நகரில் தெரு விளக்கு, கொசுத்தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் சூழலில் வழக்கு செலவினத்திற்காக மட்டும் உத்தேசமாக ரூ. 5லட்சத்தை ஒதுக்கீடு செய்திருப்பது அதிருப்தி அளிப்பதாக கூறும் பொதுமக்கள், எதிர்காலத்தில் இந்த வழக்குகளுக்கு காரணமான அலுவலர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பணத்தை வசூலித்து வழக்குகளை நடத்துவது தான் சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...