அதிராம்பட்டினதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் மாபெரும் சமுதாய நல்லிணக்க பொதுக்கூட்டம் மற்றும் 29ஆம் ஆண்டு தமுமுக துவக்க விழா இன்று ( 27-08-2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மமகவின் மாநிலத் துணைச் பொதுச்செயலாளர் தாம்பரம் மாமன்ற உறுப்பினர் எம்.தாம்பரம் யாகூப் அவர்கள் சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பிலும் மமகாவின் மாநில துணை பொதுச்செயலாளர் தஞ்சை ஐ.எம்.பாதுஷா இன்றைய காலத்தில் தமுமுகாவின் அவசியம் என்ற தலைப்பிலும் மாநில அமைப்பு செயலாளர் எம். ஐ.பழனி பாரூக் பெண் உரிமை மீட்போம் சமுதாயம் காப்போம் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற உள்ளனர். நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் பொதுமக்கள் மற்றும் இயக்கம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அழைப்பு விடுத்துள்ளனர்.