Thursday, May 16, 2024

பிலால் நகர், MSM நகர் உள்ளிட்டவற்றை தனி ஊராட்சியாக உருவாக்குக – எம்எல்ஏ அண்ணாதுரையிடம் கோரிக்கை!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா. அண்ணாதுரை, ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட எம்.எஸ்.எம். நகருக்கு இன்று வருகை புரிந்திருந்தார். அப்போது பிலால் நகர் முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் 1வது வார்டு கவுன்சிலர் சார்பாக எம்எல்ஏ அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் பிலால் நகரில் ரோடு, வடிகால் வாய்க்கால்கள் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியும், ஏரிப்புறக்கரை ஊராட்சியை தெற்கு, வடக்காக பிரித்து பிலால் நகர், ஆதம் நகர், எம்.எஸ்.எம் நகர், சவுக்குகொல்லை, சாணாவயல் ஆகியவற்றை தனி ஊராட்சியாக உருவாக்கி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் சக்தியிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஜமாஅத் தலைவர் முஹமது அமீன், செயலாளர் கமாலுதீன், துணை தலைவர் அலி அன்வர்தீன், துணை செயலாளர் முஹமது, நிஜாஸ் உள்ளிட்ட ஜமாஅத் நிர்வாகிகளும், முஹல்லாவாசிகளும் உடனிருந்தனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...