தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான கா. அண்ணாதுரை, ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட எம்.எஸ்.எம். நகருக்கு இன்று வருகை புரிந்திருந்தார். அப்போது பிலால் நகர் முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் 1வது வார்டு கவுன்சிலர் சார்பாக எம்எல்ஏ அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் பிலால் நகரில் ரோடு, வடிகால் வாய்க்கால்கள் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியும், ஏரிப்புறக்கரை ஊராட்சியை தெற்கு, வடக்காக பிரித்து பிலால் நகர், ஆதம் நகர், எம்.எஸ்.எம் நகர், சவுக்குகொல்லை, சாணாவயல் ஆகியவற்றை தனி ஊராட்சியாக உருவாக்கி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் சக்தியிடமும் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஜமாஅத் தலைவர் முஹமது அமீன், செயலாளர் கமாலுதீன், துணை தலைவர் அலி அன்வர்தீன், துணை செயலாளர் முஹமது, நிஜாஸ் உள்ளிட்ட ஜமாஅத் நிர்வாகிகளும், முஹல்லாவாசிகளும் உடனிருந்தனர்.