தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை சுட்டெரித்து வருகிறது.
நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் பொது மக்களின் தாகம் தீர்க்கும் விதமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு பகுதியில் இன்று (31/03/2018) சனிக்கிழமை காலை சுமார் 11மணியளவில் அதிரை ரோட்டரி சங்கம் சார்பாக மோர்பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுமார் 300க்கும் மேற்ப்பட்ட ஆண்கள் , பெண்கள் சிறு சுட்டி குழந்தைகளுக்கு மோர் வினியோகம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் அதிரை ரோட்டரி சங்க தலைவர் Rtn.ஆறுமுகம், செயளர் Rtn.முகமது நவாஸ் கான், பொருளர் Rtn.அகமது மன்சூர் மற்றும் சங்க உறுப்பினர்கள் Rtn.அய்யாவு, Rtn.வெங்கடேஸ், Rtn.சாகுல் ஹமீது,Rtn.சம்சுதீன், Rtn.அப்துல் ஹலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.