Tuesday, December 2, 2025

மல்லிப்பட்டினம் கிராம சபை கூட்டத்தில் சமுதாய நலமன்றத்தினர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்ற தலைவர் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு அளிப்பு.

ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் சுதந்திர தினம் அன்று நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.மேலும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானங்கள் வலிமை வாய்ந்தவையாகும்.அதனடிப்படையில் இன்று மல்லிப்பட்டினம் மனோராவில் தனி அலுவலர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மல்லிப்பட்டினம் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள சாலையில் குண்டும்,குழியுமாக இருப்பதால் சாலை சீரமைக்க வேண்டும்,குடிநீர் பிரச்சனை குறித்து அனைத்து தெருக்களிலும் குடிநீர் வினியோகம் சரியாக வருகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதையும், புதுக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் குப்பைகள் தேங்கி இருக்கின்றன மழைக்காலம் வர இருப்பதால் உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டும் என்பன உள்ளடக்கிய கோரிக்கை மனுவை மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றத் தலைவர் அப்துல் ஹலீம் மற்றும் ஹசன் முகைதீன் இருவரும் அளித்தனர்.

மேற்படி உள்ள கோரிக்கை கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img