தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் நகர எஸ்டிபிஐ கட்சியினர் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வசூல் செய்தனர்.
வரலாறு காணாத மழையால் கேரளாவில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி மிகுந்த நெருக்கடியான சூழ்நிலையில் முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அங்கு மீட்பு நடவடிக்கையில் பல்வேறு அமைப்புகள் களத்தில் நின்று உதவி செய்து வருகின்றனர்.
கேரள மக்களுக்கு நிவாரண பணிக்காக தமிழகம் முழுவதும் SDPI கட்சியினர் வெள்ளிக்கிழமை ஜூம்ஆவிற்கு வசூல் செய்தனர்.அதனடிப்படையில் மல்லிப்பட்டினம் SDPI கட்சியினர் கேரள மக்களின் நிலையை எடுத்துரைத்து வசூல் செய்தனர்.
கேரள வெள்ள மீட்பு பணியில் SDPI கட்சியினரின் பணி சிறப்பாக இருந்து வருவதாக சமூகவலைதளங்களில் பலதரப்பட்ட மக்களாலும் பேசப்பட்டு வந்தது.