Sunday, May 19, 2024

மல்லிப்பட்டினத்தில் அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகள் !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசின் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மல்லிப்பட்டினத்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல நூறு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அப்பளியில் உள்ள விளக்குகளை சமூக விரோதிகள் அடித்து உடைத்துள்ளனர். பள்ளியில் உள்ள 12 விளக்குகளை உடைத்து மட்டுமின்றி, அங்குள்ள கழிப்பறைகளை சேதப்படுத்தியும், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் உள்ளனர்.

தற்போது பள்ளி நிர்வாகத்தினர் உடைக்கப்பட்ட விளக்குகளுக்கு பதிலாக, கடையில் வாடகைக்கு விளக்குகளை எடுத்து எரியவிட்டுள்ளனர். இந்த வாடகையினால் தேவையற்ற செலவு ஏற்படுவதாகவும் பள்ளி நிர்வாகத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கூடம் என்றும் பாராமல், இவ்வாறு அடித்து உடைக்கும் ஒரு சில ஈனப் பிறவிகளின் இச்செயல் கடும் கண்டனத்துக்குரியது. மேலும் காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து இச்செயலில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...