மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று திருச்சி ரயில்வே ஜங்சனில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்(TARADTAC) சார்பில் இன்று 11.12.2018 செவ்வாய்க்கிழமை காலை திருச்சி ரயில்வே ஜங்சனில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அச்சங்கத்தின் மாநில செயலாளர் P. ஜீவா தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் C. புஷ்பநாதன், திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் P. குமார், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் M. கோபிநாத், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் R. ரவி, பொருளாளர் R. சுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் J. ஜெயபால் போராட்டத்தை துவக்கி வைத்தார். மாநில துணைத்தலைவர் D. கணேசன் விளக்கவுரை நிகழ்த்தினார். தஞ்சை மாவட்ட செயலாளர் P.M. இளங்கோவன் நிறைவுரை வழங்கினார். இப்போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.