கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டிருந்தது.
அதேபோல், SDPI கட்சியின் சார்பிலும் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டு மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த பேரிடர் மீட்பு குழுக்கள் தஞ்சை, திருவாரூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், நேற்று(20/01/2019) SDPI கட்சியின் தலைவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி திருவாரூர் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் SDPI கட்சியின் தேசிய தலைவர் தெஹ்லான் பாகவி கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில், கஜா புயலின் போது பேரிடர் மீட்பு குழு அமைத்து சிறப்பாக செயல்பட்ட SDPI மாநில பொது செயலாளர் வழக்கறிஞர். அதிரை சபீயா நிஜாம், SDPI கட்சியின் தஞ்சை மாவட்ட துணை தலைவர் அபுல் ஹசன், மாவட்ட செயலாளர் நட்ராஜ், மாவட்ட பொருளாளர் அப்துர் ரஹ்மான், பொது செயலாளர் பட்டுக்கோட்டை அப்துல்லாஹ் மற்றும் அதிரை நகர செயலர் ஷேக் தாவூத் ஆகியோருக்கு தேசிய தலைவரின் முன்னிலையில் பேரிடர் மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்டமைக்கு விருதுகள் வழங்கப்பட்டன.