Friday, May 3, 2024

மல்லிப்பட்டிணத்தில் தீவிபத்து, குடிசை எரிந்து நாசம்,துரிதமாக செயல்பட்ட இளைஞர்கள்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் தீவிபத்து குடிசைகள் எரிந்து நாசமாயின.

மல்லிப்பட்டிணம் கடற்கரை அருகில் யாகூப் கம்யூனிகேஷன் கடை எதிரே வசித்து வருபவர் ராணி.இவர் குடிசையில் வசித்து வருகிறார்.இவர் இன்று (பிப் 19) மதிய உணவு சமைத்து கொண்டிருந்தார்.வீட்டிற்கு அருகில் அமர்ந்து பேசி கொண்டிருந்த நிலையில் வீட்டில் இருந்து தீ எரிய ஆரம்பித்து மடமடவென்று தீ முழுவதுமாய் பரவி குடிசை முழுவதும் எரிந்து நாசமாயின.இதில் அரசு ஆவணங்கள்,பொருட்கள் எல்லாம் எரிந்து சாம்பலாகி போனது.

ஜாஸ் மற்றும் SRM என்ற தனியார் குடிநீர் விற்பனை வாகனத்தில் உள்ள நீரை தீயை அணைக்க இளைஞர்களுக்கு வாகன ஓட்டுனர் இலவசமாக கொடுத்து மற்ற குடியிருப்புகளில் தீ பரவாமல் தடுக்க பெரும் உதவியாக இருந்தார்.

தீயை அணைக்க துரிதமாக செயல்பட்ட குடிநீர் விற்பனை வாகன ஓட்டுனருக்கும்,இளைஞர்களுக்கும் அப்பகுதி மக்கள் பாரட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

ஏதுமின்றி நிராயுதபாணியாய் நிற்கும் ராணி கஜா புயலாலும் ஏற்கனவே ராண பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அவருக்கு தன்னார்வ,தொண்டு அமைப்புகள் உதவிட வேண்டும் என்பதும் அவரின் கோரிக்கையாக இருக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...