Tuesday, December 2, 2025

ஆட்சியைக் காப்பாற்றவே பாஜகவுடன் கூட்டணி-போட்டுடைத்த எம்பி அன்வர் ராஜா !

spot_imgspot_imgspot_imgspot_img

முத்தலாக் சட்டத்தை லோக்சபாவில் கடுமையாக எதிர்த்து பேசியவர் ராமநாதபுரம் தொகுதியின், அதிமுக எம்.பி. அன்வர்ராஜா. இறைவனுக்கு எதிரான இந்த சட்டத்திற்காக நீங்கள் தண்டனை பெறுவீர்கள் என பாஜகவிற்கு சாபம் கொடுத்தவர். ஆனால், இப்போது அதிமுக பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளது.

இதனால், அன்வர் ராஜா அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

அதேநேரம், பாஜக-அதிமுக கூட்டணியை அன்வர்ராஜா நியாயப்படுத்தி பேச ஆரம்பித்துள்ளார். அதிமுகவினருடனான அவரது பேச்சு ஒன்று அதை நிரூபிப்பதாக உள்ளது. நிர்வாகிகள் மத்தியில் அன்வர் ராஜா உரையாற்றியபோது, இவ்வாறு நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

அன்வர் ராஜா பேச்சிலிருந்து.. “தேர்தல் காலத்தில் வைக்கக்கூடிய, தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேர லாப-நஷ்ட கணக்கு. லோக்சபாவிற்குள், அல்லது சட்டசபைக்குள் அதிக எண்ணிக்கையில் நமது உறுப்பினர்களை போக வைப்பதற்காக, போடும் லாப நஷ்ட கணக்கு அது.

இந்த அரசை ‘அம்மா’ நமக்கு அளித்தார். அதைக் காப்பாற்ற வேண்டும். மக்களை காப்பாற்ற வேண்டும். அதற்காகத்தான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக தனது கொள்கையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கொள்கையில் மாற்றமின்றி தேர்தல் கால உடன்பாடுதான் இது. எனவே இதை வைத்து நமது கொள்கைகளை சந்தேகப்பட வேண்டாம். இவ்வாறு அன்வர் ராஜா தெரிவித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z
spot_imgspot_imgspot_imgspot_img