Saturday, May 4, 2024

மல்லிப்பட்டிணத்தில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லை..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிகரித்து வரும் நாய்களின் தொல்லையால் பொதுமக்கள், மாணவர்கள் நடந்து செல்ல அச்சமடைந்துள்ளனர்.மதராஷா செல்லும் குழந்தைகளையும்,பெண்களையும் நாய்கள் அச்சுறுத்தி வருகின்றன.மல்லிப்பட்டிணம் கடைவீதிகள் மற்றும் தெருப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது.

மேலும் கடந்த சிலநாட்களாக சுற்றி திரியும் நாய்கள் ஆடுகளை கடித்து குதறி வருகின்றது.இதனால் கால்நடை வளர்ப்போர் மத்தியில் கவலை ஏற்படுத்தி உள்ளது.இரவு நேரங்களில் பைக்கில் செல்வோரை நாய்கள் துரத்துவதால் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து நம்மிடம் A.நூருல் அமீன் தெரிவிக்கையில் பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை பிடித்திட சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...