Saturday, May 4, 2024

தெலுங்கானா மாநில ஆளுநராகப் பதவியேற்றார் தமிழிசை சவுந்திரராஜன் !

Share post:

Date:

- Advertisement -

மருத்துவர், சென்னை மருத்துவப் பிரிவு செயலாளர், தமிழக பா.ஜ.க கட்சித் தலைவர் போன்ற பல பொறுப்புகளை வகித்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு, தற்போது மீண்டும் ஒரு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, அவர் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, அவர் வகித்துவந்த பா.ஜ.க தலைவர் மற்றும் பா.ஜ.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமாசெய்தார்.

இந்நிலையில் இன்று, தெலங்கானா ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டார், தமிழிசை. இவரின் பதவியேற்பு விழா ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ். சவுகான், தமிழிசைக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போன்ற பல முக்கியத் தலைவர்களும் தெலங்கானா மாநிலத்தின் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

தான் ஆளுநராகப் பதவியேற்ற பிறகு, தன் தந்தை குமரி அனந்தன் காலில் விழுந்து வணங்கினார். தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானாவின் ஆளுநராகப் பொறுப்பேற்றதால், அம்மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...