Sunday, May 12, 2024

அதிரையில் மிதக்கும் MSM நகர் கவனிக்குமா ஊராட்சி நிர்வாகம்…!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம், எம் எஸ் எம் நகர் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளையும், பல வகையான நோய்களை உண்டாக்கும் குப்பை கூலங்களும் குவிந்து கானப்படுகின்றன.

மழைக்காலங்களில் வீடுகளிலும் தெருக்களிலும் மழைநீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கின்றன. இப்பகுதியில்சரியான முறையில் குப்பைகளை அகற்றாமலும், முறையான மழைநீர்/கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததாலும் வீடுகளின் உள்ளேயும், சாலைகளிலும் மழை நீர் தேங்கி அதில் நோய்களை பரப்பும் டெங்கு, வைரஸ் கொசுக்கள் வளரவும் ஏதுவாக காணப்படுகிறது.

இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் அதிகம் அதிகமாக வைரஸ் ஜுரம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மழைக்காலங்களில் இப்பகுதியின் பிரதான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, சேரும் சகதியுமாகக் காட்சியளிகின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் தெரு விளக்குகளும் சரியாக எரியாமல் இருப்பதனால் வேலை நிமித்தமாக பொது மக்கள் வீதியில் இறங்கி நடப்பற்கே அஞ்சி வீடுகளின் உள்ளேயே முடங்கி விடும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கவனிப்பாரற்று புறக்கனிக்கப்பட்டு கிடக்கும் ஆதம் நகரை மிதக்கும் எம் எஸ் எம் நகரை மீட்டு தர யாரேனும் முன் வருவார்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...