Wednesday, May 15, 2024

அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்.

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் இன்று (18-01-2020)   கூட்டமைப்பின் தலைவர் ஹாஜி.M.S.M.முஹம்மது அபுபக்கர் தலைமையில் நடைபெற்றது. முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அனைத்து சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 :
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றை எதிர்க்கும் வகையில்                               “அதிரை குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு குழு” உருவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 2 :
வருகிற ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக அதிராம்பட்டினத்தில் அனைத்து சமூக பொதுமக்கள் கலந்து கொள்ளும் ‘அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பை வலியுறுத்தி பேரணி’ நடத்துவது என்றும் பேரணியின் இறுதியில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் தேசிய கொடியேற்றி ‘அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதிமொழி’ ஏற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 3 :
பொதுமக்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தின்  (CAA) வாயிலாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்ட வல்லுனர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை கொண்டு மாபெரும் கருத்தரங்கம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...