Friday, May 3, 2024

சாலையில் பட்டாசு வெடித்தால் 2,000 ரூபாய் அபராதம்!!

Share post:

Date:

- Advertisement -

‘போக்குவரத்துக்கு இடையூறாக, சாலைகளில் பட்டாசு வெடித்தால், 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்’ என, போலீசார் எச்சரித்து உள்ளனர்.
வரும் 18ல் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து, பள்ளி மாணவர்களுக்கு, போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

போலீசாருக்கு உத்தரவு’இந்தாண்டு, பட்டாசால் தீ விபத்து உள்ளிட்ட, அசம்பாவிதங்கள் நிகழாத வகையில், சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும்’ என, போலீசாருக்கு, டி.ஜி.பி., – டி.கே.ராஜேந்திரன் உத்தர விட்டு உள்ளார். இந்நிலையில், முக்கிய சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பட்டாசுகள் வெடிக்க, போலீசார் தடை விதித்துள்ளனர்.இது குறித்து,
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பெட்ரோல் பங்க், குடிசை பகுதி, நெருக்கமான குடியிருப்பு பகுதிகளில், பட்டாசுகள் வெடிப்பதால், மக்கள் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். மேலும், முக்கிய சாலைகளில் பட்டாசுகள் வெடிப்பதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவ தோடு, போக்குவரத்துநெரிசலும் ஏற்படுகிறது
கட்டுப்பாடுமற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாதபடி, காலி மைதானம் போன்றவற்றில் மட்டுமே, பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

மீறுவோருக்கு, எரியக்கூடிய பொருட்களால் ஆபத்தை ஏற்படுத்துதல்; கவனக் குறைவால் விபத்தை ஏற்படுத்துதல் போன்ற சட்டப்பிரிவின் கீழ், 1,000 – 2,000 ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல,முதியோர்இல்லம்,குழந்தைகள்இல்லம்,மருத்துவமனைகள்அருகிலும்,பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...