Sunday, May 5, 2024

அதிரை : பொறுப்பற்ற மின்வாரியத்தால் பொதுமக்கள் அவதி !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் மின்சார வாரியத்தின் பொறுப்பற்ற தன்மை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

நள்ளிரவு கடந்துவிட்டால் மின்சார வாரிய அதிகாரிகள் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை யாரையும் இலகுவாக தொடர்பு கொள்ளவே இயலாத அளவுக்கு ஃபுல் டைட்.

04373 242444 என்ற தரைவழி தொடர்பு எண்ணும் தண்ணீர் அடித்தார் போல் 24 மணிநேரமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது வேதனையிலும் வேதனை.

மின்தடை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து நுகர்வோர்கள் தெரிந்துகொள்ள மின்வாரியத்தை தொடர்புகொள்ள இயலவில்லை என நுகர்வோர்கள் புகார் அளிக்கின்றனர்.

பாதையில் மின் கம்பி அறுந்து விழுந்தால் கூட போதையில் இருக்கும் மின்வாரிய ஆசாமிக்கு எவ்வாறு தெரிவிப்பது என ஆவேசப்பட்டார் மின் தடையால் தூக்கமிழந்த நுகர்வோர் ஒருவர்.

தமிழக அரசே மின் வாரிய அதிகாரிகளே மின் விநியோக சாதனங்களில் திடீர் பழுது ஏற்படுவது இயற்கை. ஆனால் நுகர்வோர்களுக்கு முறையாக விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதை மறவாதீர்.

இனிமேலாவது மரணித்துபோன தரைவழி தொலை பேசிக்கு உயிர் கொடுங்கள். மதுக்கூர் மின்வாரிய அதிகாரிகளுக்கு இருக்கும் பொறுப்புணர்வு கூட அதிரை அதிகாரிகளுக்கு இல்லாமல் போனது ஏனோ ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...