புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் கடந்த 3 நாட்களாக கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்றது. இதில் 16 அணிகள் பங்கேற்றன.
இத்தொடரில் சிறப்பாக விளையாடிய அதிரை ABCC அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோபாலப்பட்டினம் அணியுடன் இறுதிப்போட்டியில் மோதியது. இதில் கோபாலப்பட்டினம் அணி வெற்றி பெற்றது. அதிரை ABCC அணி வெற்றியை நழுவவிட்டு இரண்டாம் இடம் பெற்றது.
இத்தொடரில் இரண்டாம் இடம் பிடித்த அதிரை ABCC அணிக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பாக விளையாடி பரிசு வென்ற அதிரை ABCC அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.