தேசிய பத்திரிகை தினத்தையொட்டி அதிரை எக்ஸ்பிரஸ் தமது வாழ்த்துக்களை டெரிவித்து கொள்கிறது.
ஜனநாயகத்தின் நான்காவது துாணாக கருதப்படும் பத்திரிகைகளின் பணி சமுதாயத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது. அரசியல் விருப்பு வெறுப்பின்றி , தொழில்முறை நெறிகளை கட்டிக்காத்தல், செய்திகளை பாரபட்சமின்றி வழங்குவது, தவறுகளை சுட்டிக்காட்டுவது, சமூகத்திற்கு சரியான பாதைகளை தெளிவுபடுத்து போன்ற பணிகளை பத்திரிகைகள் செய்து வருகின்றன.
இது போன்ற தகவல்களை துணிவுடன் எடுத்துரைக்கும் ஊடக நண்பர்களுக்கு சாவல் மிகுந்த பணியாக இருந்தாலும் துடிப்புடன் செயலாற்றி ஊடக தர்மத்தை கட்டிகாத்து வருகிறார்கள்.
அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருந்து மக்கள் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கும் பணியயை பணியை செய்து வரும் ஊடக நண்பர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் இதயம் கனிந்த தேசிய பத்திரிக்கை தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.