திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில் எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நேற்று ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது. அது எந்த தொகுதி என்பது குறித்து அடையாளம் காண இன்று அண்ணா அறிவாலயத்தில் மமக நிர்வாகிகள் திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் மமக பாபநாசம், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அறிவித்தார். மேலும் வேட்பாளர் மற்றும் சின்னம் குறித்து தலைமை நிர்வாகக்குழு கூடி முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.