Saturday, September 13, 2025

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்றுமுதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கைக் கருத்தில் கொண்டு மின் கட்டணத்தைச் செலுத்தும் கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தாழ்வழுத்த மின் நுகர்வோர்களின் மின் கட்டணம், இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி தேதி வரும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இருந்தால், கடைசி நாள் வரும் மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்கட்டணத்தைக் கவுண்டர்களில் செலுத்துவதைத் தவிர்த்து, முடிந்தவரை ஆன்லைன் முறையில் செலுத்துமாறும் தமிழ்நாடு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img