பரவி வரும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறது .அரசும் தனது பங்கிற்கு போதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றன.ஆனால் இதனை செவிமடுக்காத இளைஞர்கள் வழக்கம் போல வீதிகளில் சுற்றி திரிகிறார்கள்.இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிராம்பட்டிணம் காவல்துறை- பேரூர் நிர்வாகம்- சமூக ஆர்வலர்கள் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.அப்போது முக கவசமின்றி சுற்றிய வாலிபர்களுக்கு அறிவுறை கூறி காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.வீடில்லா வழிப்போக்கர்களுக்கு முக கவசம் துண்டு பிரசுரம் வழங்கி பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்தப்பட்டது.முன்னதாக பேரூந்து நிலையத்தில் நடைப்பெற்ற பிரச்சார வாகன அறிமுக நிகழ்வில் காவல் துணை ஆய்வாளர் பூபதி கலந்து கொண்டு விழிப்புணர்வு குறித்து பேசினார்.இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் அப்துல் காதர்,காமீல்,நவாஸ், நிஜாம்,கஜ்ஜாலி முஹம்மது இவர்களுடன் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில் குமரகுரு, கோபி, அலெக்ஸாண்டர் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





