அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கீழத்தெரு தம்பி மளிகையை உடைத்து உள்ளே சென்ற திருடன் ரொக்கப் பணம் உள்ளிட்டவைகளை சூறையாடி சென்றன்.
காவல் துறை வைத்த பொறியில் சிக்கிய திருடன் தற்போது கம்பி என்னுகிறான்.
ஆனாலும் அதிரையில் திருட்டு ஓய்ந்த பாடில்லை.
நேற்றி நள்ளிரவு காவல் நிலையம் அருகிலுள்ள ஒரு காய்கனி கடையை பதம் பார்த்த திருடன் உழைபுக்கு ஏற்ற பொருள் அங்கு இல்லாததால் ஆத்திரத்தில் மலத்தை கழிந்துவிட்டு சென்றிருக்கிறான் இதனை கண்ட கடைக்காரர் ஆடிப்போயி இருக்கிறார்
பொருள் கிடைக்காத. விரக்தியில் சென்ற திருடனுக்கு வெல்டிங் பட்டரை ஒன்றில் பதம் பார்த்து இருக்கிறான் அதில் 8ஆயிரம் ரொக்க பணம் சிக்கியது.
போதும்டா சாமி என நினைத்து அங்கிருந்து கம்பியை நீட்டி இருக்கிறான்.
இதுகுறித்து இரு கடைகாரர்களும் காவல்துறையிடம் புகாரளிக்க புகாரின் பேரில் சம்பவ இடத்தை ஆய்வு செய்து திருடன்களை போலிசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.