நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் பல முக்கிய நகரங்களில் கடைவீதிகளில் கடைசி நேரம் வரை பொதுமக்கள் குவிந்து தீபாவளிக்கு தேவையான புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் போன்றவற்றை வாங்கி சென்றனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் அக்டோபர் 25ஆம் தேதி மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றுள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏதுவாக வரும் 25ம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.