Friday, May 3, 2024

ஏரியல்,சர்ஃப்,ரின் பெயரில் டூப்ளிகேட் சோப்புத்தூள். மாட்டிக்கொண்ட தொழிலாளர்கள்.

Share post:

Date:

- Advertisement -

சென்னையை அடுத்த செங்குன்றம் எடப்பாளையம் பகுதியில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக துணி துவைக்கும் பவுடர்களும், லிக்யூடுகளும் தயாரித்து விற்று வந்த குடோனுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.ஸ்ரீ ராம்நகர், புவனேஸ்வரி நகர், சாந்தி நகர் ஆகிய மூன்று இடங்களில் குடோன்கள் அமைத்து மிகவும் பிரபலமான நிறுவனத்தின் பெயர்களில் போலியான துணி பவுடர் மற்றும் லிக்யூட்களை தயாரித்து பருப்பு மூட்டைகளில் பேக் செய்து பருப்பு விற்பனை போலவே கள்ளத்தனமாக ஆந்திரம், கேரளா, கர்நாடகா, தமிழகம் என நான்கு ஆண்டுகளாக விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் அசல் நிறுவனத்தின் வழக்கறிஞரான பாலசுப்பரமணியத்திற்கு தெரியவரவே, முறைகேடாக நடைபெற்று வந்த குடோன்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அங்கு இதற்கு உரிமையாளர் யார் என்று கேட்ட போது அப்பகுதியிலுள்ள லோக்கல் டீலர்களுக்கு தொடர்பு கொண்டு அவர்களை வரவழைத்துள்ளார். உரிமையாளரின் பெயர் சொல்ல மறுத்த நிலையில் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர்,

அங்கிருந்த சூப்பர்வைசர் ரவி, மேனேஜர் சுரேஷ், வட இந்தியாவைச் சேர்ந்த மெஷின் ஆபரேட்டர்கள் 18 பேரையும் பிடித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதே போல, தலைமறைவான மூன்று உரிமையாளர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 60 லட்சத்திற்கும் மேலான மதிப்புடையப் பொருட்களை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...