Sunday, May 19, 2024

பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டித்து மதுக்கூரில் நாளை எஸ்டிபிஐ நடத்தும் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

Share post:

Date:

- Advertisement -

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6, ஆண்டுதோறும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் சார்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், பாபர் மசூதியை இடித்த சங்பரிவார கும்பலை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினம், பாசிச எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் டிசம்பர் 6 பாசிச எதிர்ப்பு தினத்தின் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நாளை மாலை 4.30 மணியளவில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் நடைபெற உள்ளது.

இந்த மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் M. முஹம்மது ரஹீஸ் தலைமை வகிக்கிறார். விமன் இந்தியா மூமண்ட்(WIM) அமைப்பின் மாநிலச் செயலாளர் தஸ்லீமா ஷெரீப் கண்டன உரையாற்றுகிறார். இந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...