அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) சார்பாக சிறுவர்களுக்கான ஐவர் கால்பந்துப் போட்டி வட்டார அளவில் அதிரை கிராணி மைதானத்தில் நேற்று துவங்கியது.
14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மட்டுமே பங்கு கொள்ளும் இப் போட்டியில் வெளியூர்களில் இருந்து பட்டுக்கோட்டை, மன்னார்குடி போன்று மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
நேற்று லீக் போட்டிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இன்று அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற்றது.
இந்த இறுதிப் போட்டியில் அதிரை AFFA – அதிரை WFC அணிகள் மோதின. இதில் AFFA அணி வெற்றி பெற்றது.
செல்போன்களுக்கு அடிமையாகி உடல் சார்ந்த விளையாட்டுகளில் ஆர்வமின்றி நவீன மொபைல் விளையாட்டுகளில் அதீத மோகம் கொண்டுள்ள சிறுவர்கள் மத்தியில் கால்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்தவே இந்த தொடரினை நடத்தியதாக அதிரை AFFA அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.