Wednesday, March 4, 2026

வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் ஆகும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாலை 4 மணிக்கு பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27ம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாளாகும். மாநிலம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் ஏற்கனவே சூடு பிடித்துள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பின்னர், தேர்தல் பிரச்சாரத்தில் கூடுதலாக அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...
spot_imgspot_imgspot_imgspot_img