வெல்ஃபேர் கட்சி (WELFARE PARTY OF INDIA)ன் தமிழ்நாடு மாநில தலைவர் K.S.அப்துர் ரஹ்மான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் திராவிட முன்னேற்ற கழகம் வெளிப்படையாக சனாதானத்தை எதிர்பவர்களாகவும், சிறுபான்மை காவலர்களாகவும் தங்களை வெளிப்படையாக பிரகடனப்படுத்திக்கொள்ளும் திமுகவிழும் உள்ளுக்குள் இஸ்லாமிய வெறுப்பை சுமந்தவர்களாகவே தெரிகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு வெளிப்படையான எடுத்துக்காட்டாக கூறியைவையில் சில பின்வருமாறு..
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நகர்மன்ற துணை தலைவர் குணசேகரனின் செயல்பாடுகள் அதிரை மக்கள் மத்தியில் உள்ள மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிரையில் நகர்மன்ற துணை தலைவர் பதவியை சூழ்ச்சிகள் செய்து கைப்பற்றியது மட்டுமின்றி அதிரை மக்களுக்கான நலனிலும் எதிராகவே செயல்பட்டு வருகிறார் எனவும், சமூக நல்லிணக்கத்திற்கும், அரசு விதிகளுக்கும் விரோதமாக செயல்படும் குணசேகரனை உடனடியாக பொறுப்புகளிலிருந்து நீக்கி உரிய நடவடிக்கை எடுக்க திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொண்டுள்ளார்.