80
செந்தலைவயல் மந்திரி பட்டினம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ள இப்பகுதியில் கூரையால் வேயப்பட்ட வீடுகள் அதிகம் உள்ளன.
இந்நிலையில் அப்பகுதியில் சமையல் எரிவாயு உருளை கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது .
இதில் தீ மளமளவென பரவி அக்கம்பக்கத்து வீடுகளுக்கு பரவியது. இதில் சுமார் 15 பவுன் தங்க நகை, 1 லட்ச ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவைகள் எரிந்து நாசமடைந்து விட்டன.
இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தும் நீண்ட நேரமாகியும் தீயணைப்பு வாகனம் வராததால் ஊர்மக்களே தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.