தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டது.
ஜனவரி 26 குடியரசு தினத்தையொட்டி நேற்று காலை கிராம சபா கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா,ஒன்றிய கவுன்சிலர் மீனவராஜன் தலைமை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களை பொதுமக்கள் முன்மொழிந்தனர்.பிறகு CAA,NPR போன்ற குடியுரிமை சட்டங்களுக்கு எதிராகவும்,5வது மற்றும் 8வது படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வை திரும்ப பெறவும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
கூட்டத்திற்கு வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.