Monday, January 20, 2025

வெளிச்சத்திற்காக காத்திருக்கும் அதிரை பேருந்துநிலையம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் காலை முதல் இரவு வரை எப்பொழுதும் பரபரப்பு நிறைந்தது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள்,அதிரையை சுற்றியுள்ள கிராமத்து மக்கள் வந்துபோகும் நிலையில் உள்ளது அதிரை பேருந்து நிலையம்.அப்படியிருக்கையில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் இருந்தும் எரிவதில்லை.அங்குள்ள உயர்ந்த மின்விளக்கு போஸ்ட் பழுதாகிவிட்டது. இதனால் பேருந்துநிலையத்தில் எந்தவித அசம்பாவிதங்கள் நடந்தாலும் தெரிவதற்கு வாய்ப்பில்லை அந்தளவிற்கு அதிரை பேருந்து நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.பேருந்து நிலையத்திற்கான வெளிச்சம் என்பது அங்குள்ள வணிக நிறுவனங்களின் மூலம் தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரை பேரூராட்சி அலுவலகத்தின் அருகிலேயே இருக்கும் பேருந்து நிலையத்தின் மின்விளக்குகளை சரி செய்யாத அலட்சியம் காட்டும் நிர்வாகமாக இருக்கிறது.மின்விளக்குகள் எரிவதற்கான வழிவகை செய்யவேண்டும் என்பது வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

அதிரையில் இருக்கும் அரசியல் கட்சி,அமைப்புகள்,இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் இதற்கான நிரந்தர நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்ற ஏக்கத்துடன் பொதுமக்கள்  இருக்கின்றார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...

அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...

அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img