Thursday, December 11, 2025

வெளிச்சத்திற்காக காத்திருக்கும் அதிரை பேருந்துநிலையம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் காலை முதல் இரவு வரை எப்பொழுதும் பரபரப்பு நிறைந்தது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள்,அதிரையை சுற்றியுள்ள கிராமத்து மக்கள் வந்துபோகும் நிலையில் உள்ளது அதிரை பேருந்து நிலையம்.அப்படியிருக்கையில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் இருந்தும் எரிவதில்லை.அங்குள்ள உயர்ந்த மின்விளக்கு போஸ்ட் பழுதாகிவிட்டது. இதனால் பேருந்துநிலையத்தில் எந்தவித அசம்பாவிதங்கள் நடந்தாலும் தெரிவதற்கு வாய்ப்பில்லை அந்தளவிற்கு அதிரை பேருந்து நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.பேருந்து நிலையத்திற்கான வெளிச்சம் என்பது அங்குள்ள வணிக நிறுவனங்களின் மூலம் தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரை பேரூராட்சி அலுவலகத்தின் அருகிலேயே இருக்கும் பேருந்து நிலையத்தின் மின்விளக்குகளை சரி செய்யாத அலட்சியம் காட்டும் நிர்வாகமாக இருக்கிறது.மின்விளக்குகள் எரிவதற்கான வழிவகை செய்யவேண்டும் என்பது வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

அதிரையில் இருக்கும் அரசியல் கட்சி,அமைப்புகள்,இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் இதற்கான நிரந்தர நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்ற ஏக்கத்துடன் பொதுமக்கள்  இருக்கின்றார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...
spot_imgspot_imgspot_imgspot_img