Home » மல்லிப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்..!

மல்லிப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்..!

by admin
0 comment

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.

அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கொரோனா பேரிடர் சிறப்பு நிவாரணமாக ரூ.5000 உடனே வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் நடத்தும் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுவை அதிகாரிகள் பெற்று மேல் அதிகாரிக்கு அனுப்புவதாக கூறினர்.மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய தலைவர் ஜலீல் முகைதீன் போராட்டத்தை ஒருங்கிணைத்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter