பேராவூரணி, ஜூன்.21-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பைங்கால் கிராமத்தின் தெற்கு கடைசி எல்லையும் புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு வடக்கு எல்லையுமான கல்லணை கால்வாய் பெரிய ஆறு இரண்டு கிராமத்திற்கும் எல்லையில் சுமார் 75 அடி நீளத்தில் உடைப்பு ஏற்பட்டது.இதனால் கிழக்கு பகுதியில் 600 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த உளுந்து,பயிறு,எள்,கரும்பு, நெல்,தென்னங்கன்றுகள் வெள்ளத்தில் அடியோடு அடித்து செல்லப்பட்டது.இதனால் ரூ.50 லட்சம் நாசமடைந்துள்ளது.பாதிக்கப்பட்ட இடத்தை பைங்கால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் மா.பழனிவேல், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா சுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் சங்கவி மதன்குமார்,பேராவூரணி வட்டாட்சியர் க. ஜெயலட்சுமி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்,200 கிராம விவசாயிகள் ஆற்றில் இறங்கி உடைப்பை அடைப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.
More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...










