Home » ஐபிஎல் போட்டியை நடத்த இங்கிலாந்து விருப்பம் இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்!!

ஐபிஎல் போட்டியை நடத்த இங்கிலாந்து விருப்பம் இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்!!

0 comment

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் மார்ச் 29-ந் தேதி மும்பையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற இருந்தது. கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக இந்த போட்டி காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளி போடப்பட்டால், வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த போட்டியை வெளிநாட்டில் நடத்தலாமா? என்பது குறித்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை செய்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வாரியங்கள் ஐ.பி.எல். போட்டியை தங்கள் நாட்டில் நடத்த விருப்பம் தெரிவித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தை அணுகி இருந்தது. இந்த நிலையில் தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும், ஐ.பி.எல். போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter