நிவர் புயலின் தாக்கத்தால் அதிரையில் அதீத மழை பெய்யும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில் இப்பேரிடரை எதிர்கொள்ள தேவையான ஆயத்த பணிகளை பேரூராட்சி நிர்வாக அலுவலர் பரமேஸ்வரி தலைமையில் துப்புரவு ஆய்வாளர் தமிழ்வானன் மேற்பார்வையில் நடைப்பெற்று வருகிறது.
இதேபோல் ஏரிப்புறக்கரைக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து அகற்றப்பட்டு அருகில் உள்ள பாதுக்காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்
அக்கிராம பஞ்சாயத்து தலைவர் சக்தியுடன் இணைந்து கவுன்சிலர் கமால் ஜாஸ்மின்பாணு, பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.